தமிழக அரசின் பிடியிலிருந்து கோவில்கள் மீட்கப்படும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் உள்ள கோவில்களை மாநில அரசு ஆக்கிரமித்து உள்ளது என்று குற்றம் சாட்டினார். அதேசமயம் கோவில்களை அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அநீதியானது என்றும் கோவில்களில் வரும் வருமானங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக அரசின் பிடியிலிருந்து கோவில்கள் அனைத்தும் மீட்கப்படும் வரை ஓய மாட்டோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக அரசின் பிடியில் கோவில்கள் சுரண்டுவது குறித்து பிரதமர் மோடி கூறியிருப்பது மிக சரியானது. கோவில்கள் என்பது நம்முடைய வழிபாட்டுக்கான இடம் சுரண்டலுக்கான இடம் கிடையாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.