திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சூசையாபுரத்தில் பட்டதாரியான நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு வேலை தேடி வந்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு மயிலம்பட்டியைச் சேர்ந்த பரத்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் நவீன் குமாருக்கு அறிமுகம் ஆனார்கள். அவர்கள் இரண்டு பேரும் தங்களுக்கு தெரிந்த அதிகாரிகள் மூலமாக சுற்றுலா துறையில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி நவீன் குமாரிடமிருந்து 7 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளனர்.

ஆனால் கூறியபடி அவர்கள் நவீன் குமாருக்கு அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை. இதுகுறித்து நவீன் குமார் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.