இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்ல பிராணிகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில், வீட்டில் வளர்க்கப்படும் நாய் ஒன்று மாடியில் நின்று கொண்டிருக்கிறது. அங்கு வரும் குரங்கு ஒன்று அதற்கு பல வழிகளில் தொந்தரவு கொடுக்கிறது.

நாயின் முகத்தைப் பிடித்து குரங்கு பாடாய்படுத்துகின்றது. நாயின் கை கால் மற்றும் கழுத்து என குரங்கு நாயை பல இடங்களில் தொட்டு சீண்டுகின்றது. மற்றொரு சுவரை மீது ஏறி நாயை மிரட்டுவது போல செய்கிறது. ஆனால் அந்த நாய் ஒன்றுமே செய்யாமல் கூலாக நிற்கிறது. இந்த குரங்கு செய்யும் சேட்டைகளை அது கண்டு கொள்ளவே இல்லை. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.