தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் அவ்வப்போது புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு பணிகள் ஆமை வேகத்தில் அல்ல, சுனாமி வேகத்தில் நடைபெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் என்ற தலைப்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கோட்டையில் தீட்டும் திட்டங்கள் கோடிக்கணக்கான மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகளாவிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஏதுவான சூழலை ஏற்படுத்த வேண்டும் போன்ற உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.