தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி தொகையாக ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம் அதிகபட்சம் மூன்று வருடங்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தீவிரநோய் பாதிப்பு உதவி தொகையானது மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என ஆண்டுக்கு இரண்டு முறை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கட்டுமான தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.