பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து மடலில், சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்பு நெறி காட்டிய நபிகள் நாயகத்தின் வழி நடக்கும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்கள்.

ஏழை எளியோரின் பசி தீர்த்து கொண்டாடும் தியாகத்தின் திருநாள் இது. பண்பையும் மனித நேயத்தையும் இஸ்லாமிய பெருமக்கள் வெளிப்படுத்துகின்றன. இத்தகைய உயரிய நெறியை கடைப்பிடித்து வரும் இஸ்லாமிய சமூகத்தினர் அனைவருக்கும் பக்ரீத் திருநாளை கொண்டாடி அன்பை பரிமாறிக் கொள்ள வாழ்த்துகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.