காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு 300-க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர். மேலும் கோயிலை சுற்றி 40-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு சிசிடிவி வாயிலாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வருகிற 1-ஆம் தேதி திருக்கல்யாணமும், 2-ம் தேதி மாங்கனி இறைத்தல் நிகழ்வும் நடைபெற இருக்கிறது. இதுகுறித்த தகவலை காரைக்கால் எஸ்.எஸ்.பி. மணீஷ் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.