சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அதாவது காவேரி மருத்துவமனையில் இருந்த படியே அமைச்சர் செந்தில் பாலாஜி காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவலை வருகிற ஜூலை 12ஆம் தேதி வரை நீட்டித்து முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் காணொலி காட்சி வாயிலாக ஆசைப்படுத்தப்பட்டு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.