தமிழகத்தில் அதிக கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி வரை வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கனமழையால் பெரும்பாலான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் தன்னார்வலர்கள் மற்றும் பொது நல அமைப்புகள் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றன.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வாகனங்களில் சிரமம் இல்லாமல் கொண்டு செல்ல ஏதுவாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளுக்கும் டிசம்பர் 31ஆம் தேதி வரை அனைத்து வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து கட்டண விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.