பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சில வாரங்களில் பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர் பாபு, ஆய்வு நடத்தியுள்ளார். வாகன நெரிசல் மற்றும் மெட்ரோ பணிகளால், சென்னை திணறி வரும் நிலையில், பொங்கல் பண்டிகைக்குள் பேருந்து நிலையத்தை திறக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் பொங்கல் பண்டிகைக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இன்று பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தினந்தோறும் இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் 840 உட்பட 2310 பேருந்துகள் இயக்கப்படும் என்றார். நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.