தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மீண்டும் கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் நிகழ்வு வங்க கடலில் நிலவ இருக்கிறது. இது நகரத் தொடங்கும் போது அதிக அளவில் மழை இருக்கும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனக் கூறியுள்ளனர். ஏற்கனவே பெய்த கனமழையால் சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.