நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் கச்சனம் மெயின் சாலையில் 14-வது வார்டு அமைந்துள்ளது. இந்த சாலையை ஒட்டி மேற்கு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைந்துள்ளது. இந்த சாலையில் 2 மின்கம்பங்கள் சேதமடைந்து சாய்ந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில்  மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாய்ந்த நிலையில் இருந்த இரண்டு மின்கம்பங்களை சீரமைத்துள்ளனர்.