விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் கூலி வேலை பார்க்கும் சாமுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சாமுவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த மாவட்ட சிறப்பு நீதிமன்றம் சாமுவேலுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 6000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.