கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலமநல்லூரில் சாதிக் பாஷா என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான சாதிக் பாட்ஷா கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தீபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சரிவர வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த சாதிக் பாட்சா சுய உதவிக் குழுவில் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் சாதிக் பாட்ஷா தனது மனைவியிடம் அம்மா வீட்டிற்கு சென்று சாப்பாடு வாங்கி வா என கூறினார். இதனை ஏற்று தீபா சாப்பாடு வாங்க சென்ற நேரம் மது குடித்துவிட்டு சாதிக் பாஷா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாதிக் பாட்ஷாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.