சென்னை கோவிலம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் பணியின்போது சாரத்திற்கான இரும்பு கம்பி விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இரும்பு கம்பி விழுந்ததில் பலத்த காயமடைந்த சந்திரசேகர் என்ற நபர் கடுமையாக படுகாயங்களுடன் ரத்தம் சொட்டச்சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்திருக்கிறார்கள். 60 அடி உயரத்திலிருந்து 20 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பியை சாரமாக அமைப்பதற்காக கயிறு கட்டி மேலே தூக்கி இருக்கிறார்கள். அந்த சமயத்தில் கீழே விழுந்து விபத்து ஏட்பட்டுள்ளது.  கம்பியை மேலே தூக்கிய நபர் தப்பி ஓடி இருக்கின்றார். பள்ளிக்கரணை காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்துக்கு காரணமானவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.