பஞ்சாபில் கடந்த வாரம் தமிழக வீரர்கள் இரண்டு பேர் உட்பட நான்கு ராணுவ வீரர்கள் துப்பாக்கி சண்டையில் உயிரிழந்தனர். இந்நிலையில் நான்கு பேரில் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது தனிப்பட்ட காரணத்தால் நான்கு வீரர்களையும் சக ராணுவ வீரர் சுட்டுக்கொன்றது தற்போது அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ராணுவ வீரர் தேசாய்மோகனை கைது செய்து ராணுவ உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.