நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தில் நேற்று இரவு சுமார் ஒரு நிமிடத்திற்கு மேல் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் பல கட்டடங்கள் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த 30 நாளில் 3ஆவது முறையாக அங்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.