நொய்டாவில் பாம்பு விஷத்துடன் ரகசிய பார்ட்டிகளை நடத்தி வந்த பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளளனர். மேலும் காவல்துறையினர் அந்த பார்ட்டியில் உள்ள 9 பாம்புகளை பறிமுதல் செய்தனர். ஹரியாணா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த எல்விஷ் யாதவ் யூடியூபில் பிரபலமான பல வீடியோக்களை வெளியிட்டதால் பிரபலமானார்.

அதன்பின்னர்  பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்று மேலும் பிரபலமடைந்தார். தற்போது, பாம்பு விஷத்துடன் பார்ட்டி நடத்துவதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜபோதைக்காக அவர்கள் இப்படி செய்துள்ளார்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.