புதுச்சேரி பூர்ணாங்குப்பம் கடலில் குளித்துக் கொண்டிருந்த 3 மாணவர்கள் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 2 குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ணராஜ் (15), புஷ்பராஜ் (19), சோபன் ராஜ் (18) ஆகிய மூவரும்தான் உயிரிழந்தவர்கள். கடலில் மிதந்து வந்த அவர்களது உடல்களை மீனவர்கள் கைப்பற்றி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.