திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழ பிள்ளையார்குளம் குறிச்சி நகரில் கருப்பசாமி என்பவர் விசித்து வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சசி கண்ணன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. நேற்று கருப்பசாமியின் புதிய வீட்டில் கிரகப்பிரவேச நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சசி கண்ணன் கருப்பசாமியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அருகில் இருக்கும் கோவிலுக்கு சமரசம் பேச வருமாறு அழைத்தார்.

அதன்படி கருப்பசாமி அங்கு சென்றவுடன் சசி கண்ணன் அதே ஊரில் வசிக்கும் மீனா ராஜா, பூதப்பாண்டி ஆகியோருடன் இணைந்து தகராறு செய்து அரிவாளால் கருப்பசாமியை வெட்டியுள்ளனர். இதனால் காயமடைந்த கருப்பசாமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.