கொல்கத்தாவைச் சேர்ந்த போக்குவரத்து காவலருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதாவது கொல்கத்தாவில் உள்ள ஹௌரா பாலம் போக்குவரத்து போலீஸ் ஒருவர் ராஜ் கத்ரா என்ற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு மாணவி தேர்வு மையத்தை கண்டுபிடிக்க முடியாமல் அழுது கொண்டிருந்தார்.

இதை கண்ட அந்த காவலர் ராஜகத்ரா காவல் கட்டுப்பாட்டு அறிக்கை தகவல் தெரிவித்து 10 நிமிடங்களில் தேர்வு எழுதும் மையத்திற்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். அதோடு சிறுமி தேர்வு எழுதி முடிக்கும் வரை அங்கேயே காத்திருந்துள்ளார். மேலும் போக்குவரத்து காவலரின் இந்த செயலுக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.