பிளாஸ்டிக் பைகளுக்கு பை பை சொல்ல வேண்டும் என பிரதமர் நேரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே பேசி வருகிறார். அதன்படி இன்று பேசிய மோடி, “இ-சஞ்சீவனி மூலம் 10 கோடி பேர் பயனடைந்துள்ளனர். ஏழைகள் உயிர்காக்கும் செயலியாக இது மாறியுள்ளது. பிளாஸ்டிக் பைகளுக்கு மக்கள் BYE-BYE சொல்ல வேண்டும்.

மக்கள் உறுதியாக இருந்தால் இந்தியாவை நிச்சயம் தூய்மைப்படுத்த முடியும். ஒவ்வொரு பொதுமக்களும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மக்களின் இந்த முயற்சி எவ்வளவு திருப்தி தரும் என்பதை ஒவ்வொருவரும் உணரும் காலம் வரும் என்று அவர் கூறியுள்ளார்.