பிரபல பாடகரான சித்து மூஸ்வாலா என அழைக்கப்படும் சுப்தீப் சிங் சித்து, கடந்த ஆண்டு மே 29 ஆம் தேதியன்று மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலை குறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பேர் பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்திலுள்ள கோயிண்ட்வால் சாஹிப் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் கைதிகளுக்கு இடையில் நடைபெற்ற சண்டையில் சித்து மூஸ்வாலா கொலையில் தொடர்புடைய 2 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சண்டையில் கைதி ஒருவர் காயமடைந்து உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.