மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி துணை CM மணிஷ் சிசோடியாவை CBI கைது செய்தது. ஆம் ஆத்மி தலைமையிலான அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கியது. இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும், சிசோடியாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, சிசோடியா இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். 8 மணி நேரமாக நடந்த விசாரணையை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.