இந்தியாவுக்கு வருகை தருமாறு ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்சுக்கு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, அவர் இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் நேற்று காலை டெல்லிக்கு  வந்துள்ளார்.

இப்பயணத்தில் ஜெர்மனி அதிபர் ஸ்கால்சுக்கு ராஷ்டிரபதி பவனில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சுற்றுப் பயணத்தில் அதிபர் ஸ்கால்ஸ் டெல்லியிலுள்ள சாலையோர கடை ஒன்றில் தேநீர் வாங்கி அருந்தி, கடைக்காரர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்து கொண்டார். இதுகுறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.