ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கல்லூரியை சேர்ந்த விகாஸ் ரெட்டி, தலாரி பிரவீன் மற்றும் கல்யாண் ராம் உள்ளிட்ட மூன்று மாணவர்கள் சித்தூரில் உள்ள நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு சென்று உள்ளனர்.

இந்நிலையில் நண்பனின் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு மீண்டும் குப்பத்திற்கு திரும்பினர். அப்போது  சின்ன செட்டி பள்ளி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது லாரி மீது திடீரென மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீஸர் மூன்று பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.