காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள  ராய்ப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசியதாவது “7 வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன். தற்போது எனக்கு 52 வயது ஆகிறது. ஆனால் எங்களுக்கு வீடு எதுவும் இல்லை என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, இந்திய ஒற்றுமை பயணம் வாயிலாக லட்சக்கணக்கான மக்கள் எங்களுடன் இணைந்துள்ளனர். சீனாவின் பொருளாதாரம் நம்மை விட பெரியது. அவர்களை எப்படி எதிர்த்து போராடுவது என்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர். அவர் சொல்வது தேசியவாதம் அல்ல, கோழைத்தனம் என்று சாடினார்.