மற்ற நாடுகளில் இருப்பது போல இந்தியாவிலும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் கருத்து தெரிவித்த நீதிபதி சந்திரசூட் “இப்படி விடுமுறை வழங்கினால் பெண்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படும். நிறுவனங்கள் அவர்களை வேலைக்கு பணியமர்த்த தயங்கலாம்” என்று கூறியுள்ளார்.
