நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ராசிபுரம் நடுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அருந்திய 20 மாணவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. சத்துணவு சாப்பிட்ட 20 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை கண்டித்து பெற்றோர்கள் மறியல் செய்தனர். எவ்வித தகவலும் அளிக்காமல் மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.