முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காவி வேட்டி அணிந்து பேரவை கூட்டத்தில் கலந்துகொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது அவர் பாஜகவில் இணைந்துவிட்டாரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாகவே ஓபிஎஸ் பாஜகவிற்கு ஆதரவாக பேசிவரும் நிலையில், அவர் எப்போது வேண்டுமானாலும் பாஜகவில் இணையலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில், அவர் காவி வேட்டியில் வந்துள்ளது பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் ஆன்மிக காரணங்களுக்காக தான் அதிமுக கரை வேட்டியை தவிர்த்து காவி வேட்டியில் வந்தார் என்றும் மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை எனவும் அவரது தரப்பு தெரிவித்துள்ளது.