உலக கோப்பை இறுதி போட்டியில் நாளை இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ள நிலையில், யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், நாளை உலக கோப்பை இறுதிப்போட்டி நடைபெறுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘கப்பு முக்கியம் பிகிலு’ என்று அவர் சிரித்துவிட்டு, எனக்கும் கிரிக்கெட்டிற்கும் சம்மந்தம் இல்லை, நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை என தெரிவித்தார்.