சச்சினுக்கு பிறகு தோனிக்கு தான் அதே அன்பும் பாசமும் கிடைத்திருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்திய அணியில் எத்தனையோ வீரர்கள் விளையாடி இருக்கின்றனர். ஆனால் தோனிக்கு தான் ரசிகர்கள் அதிக அன்பும் வரவேற்பும் கொடுக்கின்றனர். தோனி என்ற பெயர் ஒவ்வொருவருடைய இதயத்திலும் பதிந்து உள்ளது என்று தெரிவித்துள்ளார்.