கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் அருகே அரசு கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் சக மாணவியுடன் பேசியுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டது. உடனே அங்கு வந்த தற்காலிக பேராசிரியர்கள் விசாரிப்பதற்காக அந்த மாணவரை கல்லூரி முதல்வரிடம் அழைத்து சென்றனர். அவர்கள் மாணவன் மது போதையில் இருப்பதாக நினைத்தனர்.

இதனால் அச்சத்தில் அந்த மாணவர் திடீரென கல்லூரி வளாகத்தின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் மாணவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் மாணவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் விசாரணை நடத்திய போது அந்த மாணவர் மது போதையில் இல்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.