திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையை அடுத்த வலசப்பட்டியில் இருளப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீர மருதமுத்து என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் மர தச்சராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 16-ஆம் தேதி வீர மருதமுத்துக்கு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 14-ஆம் தேதி வீர மருதமுத்து இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டிக்கு சென்றுள்ளார்.

அவர் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை மினிக்கியூர் பிரிவு அருகே சாலையை கடக்க முயற்சி செய்தபோது எதிரே வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே வீரமரதமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4 நாட்களில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.