திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் லால்குடி நன்னிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் அவரது மனைவி பிரதீபா ஆகியோர் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என நந்தகுமாரிடம் கூறியுள்ளனர். மேலும் 25 லட்ச ரூபாய் பணத்தை முதலீடு செய்தால் 6 மாதத்தில் வட்டியுடன் சேர்த்து 50 லட்சம் ஆக திரும்பத் தருவதாக உறுதி அளித்தனர்.

இதனை நம்பிய நந்தகுமார் 25 லட்ச ரூபாய் பணத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி அவர்கள் பணத்தை கொடுக்கவில்லை. நான்கு மாதங்கள் கழித்து கூகுள் பே மூலம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 41 ரூபாய் பணத்தை மட்டும் கொடுத்துள்ளனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நந்தகுமார் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.