இந்து சமய அறநிலையத்துறை செயலியை பதிவிறக்கம் செய்யாவிட்டால் சம்பளம் பிடிக்கப்படும் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. துறை அதிகாரிகளின் களப்பணிகளை ஆய்வு செய்யவும் கண்காணிப்பதற்கும் சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் சேகர்பாபு செயலி ஒற்றை அறிமுகம் செய்து வைத்தார். தற்போது இந்து சமய அறநிலையத்துறையில் 25 ஆயிரம் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் இந்த செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் இல்லாவிட்டால் சஸ்பெண்ட் செய்யப்படுவர் மற்றும் சம்பளம் பிடித்து செய்யப்படும் என உயர் அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர். தற்போது இதற்கு பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.