தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னநூலஅள்ளி கிராமத்தில் விவசாயியான கோவிந்தன்(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் வளர்த்து வந்த கோழி வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றில் தவறி விழுந்தது. அதனை மீட்பதற்காக கிணற்றுக்குள் இறங்கிய போது கோவிந்தன் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தனின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.