தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மதுபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர் உட்கோட்ட பகுதிகளில் மது போதையில் வாகனத்தை ஒட்டியதாக கூறி 50 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். மேலும் தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் அவர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.