தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வகுத்துபட்டியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டாக சரவணன் அழகாபுரம் பகுதியில் இருக்கும் வங்கியில் வேலை பார்க்கும் இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில் சரவணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் இளம்பெண் அவரை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.

இதனையடுத்து சரவணன் தனது காதலியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு எண்ணை தவிர வேறு யாரையாவது திருமணம் செய்தால் நாம் எடுத்த புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அந்த பெண் தனது செல்போன் எண்ணை மாற்றி விட்டார்.

இதுகுறித்து அறிந்த இளம் பெண்ணின் தந்தை சரவணன் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த சரவணன் இளம்பெண்ணுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சரவணனை கைது செய்தனர்.