மருத்துவ விடுப்பில் வீட்டுக்கு வந்த இளம் காவலர் தன்னுடைய அம்மாவுக்கு உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஊஞ்சங்காடு பகுதியை சேர்ந்த அன்புராஜ் என்ற 22 வயது இளைஞர் சென்னை ஆவடியில் உள்ள ஆயுதப்படை சிறப்பு காவல் பிரிவில் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் காவலர் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் இறப்பதற்கு முன்பு தன் அம்மாவுக்கு எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றிய நிலையில் அந்த கடிதத்தில் போகிறேன் அம்மா நான் இத்தனை நாள் வாழ்ந்தது உனக்காகத்தான் என்று எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.