கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் குடகு மாவட்ட எல்லை பகுதியில் உள்ள சம்பாஜே என்ற இடத்தில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளது. என் நிலையில் இந்த கோர விபத்தில் மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.