தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி சடங்கு நிகழ்வுகள் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுப்பதால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு மேம்பாலம் வழியாக செல்பவர்களை மாற்று பாதையில் திருப்பி விட போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். மக்களும் அதற்கு ஏற்றது போட தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்வது நல்லது.