நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று காலை உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இன்று காலை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இரங்கல் தெரிவித்துள்ளார். நமது புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் இப்போது இல்லை என்பதை அறிந்து மனம் உடைந்தது என்று இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் ஒரு அற்புதமான மனிதர், ஒரு பன்முக ஆளுமை மற்றும் ஒரு புத்திசாலித்தனமான அரசியல்வாதி. அவர் நேராக தெலுங்கு படங்களில் நடித்ததில்லை என்றாலும் தெலுங்கு ரசிகர்களாலும் பெரிதும் விரும்ப பட்டவர் என்று குறிப்பிட்டுள்ளார்.