கோடை விடுமுறையால் ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக மத்திய பிரதேச மாநில ஜபல்பூரில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்க மேற்கு மத்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி ஜபல்பூரில் இருந்து ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை அனைத்து வியாழக்கிழமை தோறும் மாலை 4.25 மணிக்கு புறப்படுகிறது. சனிக்கிழமை அதிகாலை 12.15 மணிக்கு மதுரை வந்தடையும். மறுமார்க்கமாக மதுரையிலிருந்து சனிக்கிழமைதோறும் இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை ஜபல்பூர் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.