தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் குறைந்த அளவிலான வாக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், தேர்தல் ஆணையம் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்தது. புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இருந்தாலும் நகர்ப்புறத்தில் இருக்கும் மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டாததே வாக்கு சதவீதம் குறைவுக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்