நடிகர் விஜய் நேற்று நண்பகலில் சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார். அப்போது அங்கு கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் தேர்தல் விதிகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 200க்கும் மேற்பட்ட நபர்களுடன் வாக்குச்சாவடிக்குள் சென்று விஜய் வாக்களித்ததாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செல்வம் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.