தேர்தல் பத்திரங்கள் மூலம் நாட்டிலேயே அதிக நன்கொடை வாங்கிய கட்சிகளின் பட்டியலில் பாஜக முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. நாட்டில் உள்ள பல கட்சிகள் கோடி கோடியாக நன்கொடையை வாங்கி குவித்துள்ள நிலையில் தேர்தல் பத்திரங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் இடதுசாரி கட்சிகளான சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய இரண்டு கட்சிகள் ஒரு ரூபாய் கூட நன்கொடை பெறவில்லை.