கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, ஆண்டுக்கு சுமார் $2 மில்லியன் ஊதியம் பெற்றாலும், மற்ற பல வெற்றிகரமான சிஇஓ-க்களைப் போல அதிகாலை 5 மணி அலாரத்தையோ அல்லது கடுமையான காலை உடற்பயிற்சிகளையோ பின்பற்றுவதில்லை. உலகளாவிய தொழில்நுட்ப ஜாம்பவானை வழிநடத்தும் அவர், தனது காலை நேரத்தை மிகவும் நிதானமாகவே தொடங்குகிறார்.
மேலும் அதிகாலையில் எழுந்து ஜிம்மிற்கு ஓடுவதற்குப் பதிலாக, நீண்ட நேரம் செய்தித்தாள்களை வாசிப்பதையும், நிதானமாக தேநீர் அருந்துவதையும் அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த அமைதியான காலைப் பொழுது, அன்றைய நாளின் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான மனத்தெளிவை அவருக்கு வழங்குவதாக அவர் கருதுகிறார்.
இந்நிலையில் கடுமையான உடற்பயிற்சி மற்றும் தூக்கத்தைக் குறைக்கும் ‘ஹசில் கலாச்சாரத்திற்கு’ மாறாக, சுந்தர் பிச்சை தனது மன நலத்திற்கும், சீரான வாழ்க்கை முறைக்கும் முக்கியத்துவம் அளிக்கிறார். காலை உணவின் போது செய்திகளை விரிவாக வாசிப்பது தனது சிந்தனையை ஒருமுறைப்படுத்துவதாக அவர் குறிப்பிடுகிறார்.
இதனால் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தை வழிநடத்திக் கொண்டே, இவ்வளவு எளிமையான மற்றும் அழுத்தமில்லாத காலைப் பொழுதை அவர் கடைபிடிப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிகரமான வாழ்க்கைக்கு எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை, மாறாக ஒருமுகப்படுத்தப்பட்ட நிதானமான தொடக்கமே சிறந்தது என்பதை இவரது வாழ்க்கை முறை உணர்த்துகிறது.
