பொதுவாகவே பாம்புகள் என்றால் அவை அதிக விஷத்தன்மை கொண்டவையாக இருக்கும். அதன் அருகில் செல்வதற்கே அனைவரும் நடுங்குவார்கள். அந்த அளவிற்கு மனிதனின் உயிரை பறிக்கும் அளவிற்கு அதிக விஷத்தன்மை கொண்டது. காடுகளில் அதிகம் இருக்கும் பாம்புகள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் தற்போது வந்து செல்கின்றன. சமீபகாலமாகவே சமையலறை, படுக்கையறை மற்றும் பைக் என அனைத்திலும் அதனை பார்க்க முடிகிறது.

இவ்வாறு மனிதர்களை அனைத்து இடங்களிலும் அச்சுறுத்தி வரும் பாம்புகளை நபர் ஒருவர் கொத்தாக கழுத்தில் அணிந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் திருமண மேடை ஒன்றில் வைத்திருந்த பையில் இருந்த பாம்புகளை எடுத்துக் கொண்டு தன்னுடைய கழுத்தில் மாலையாக போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர பலரும் அவரை கடுமையாக திட்டி வருவது மட்டுமல்லாமல் வனத்துறையினர் கண்ணில் படும்படி காணொளி செல்ல வேண்டும் என கொந்தளித்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

John Prabakaran இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@prabakaran_john)