இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் மழை நீடிக்கும் என்பதால் அடுத்த 24 மணி நேரம் மக்கள் வீட்டிற்கு உள்ளேயே இருக்குமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், உதவி தேவைப்படுவோர் 1100, 1070, 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மக்களுக்கு உதவுவதற்காக எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதியில் தங்கி இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மழை காரணமாக நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.